About Panchangam

இணையதளம் பற்றிய தகவல்கள்:

அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அனைத்து தமிழ் இந்து மக்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய களனி மயமாக்கப்பட்ட தற்போதய நிலையில் தமிழ் இந்து பஞ்சாங்கம் நாட்காட்டி சம்பந்தமாக ஏராளமான இணையதளங்கள் உள்ளன. ஆனால் இலங்கை (ஸ்ரீலங்கா) தமிழர் மரபிலான வாக்கிய பஞ்சாங்கம் நாட்காட்டியினை கொடுப்பதில் அடியேன் பெருமை அடைகிறேன். பின்னர் இலங்கை யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு வாக்கிய பஞ்சாங்கக் கணிப்பில் ஈடுபட்டிருக்கும் இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கக் கணிதர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பூரண அனுமதியுடன் இவ் இணையதளத்திலுள்ள பஞ்சாங்கம் நாட்காட்டி விடயங்கள் அமைந்து இருக்கும். மற்றய விடயங்கள் எம்மாலும், தமிழ் இந்து சமய அறிஞர்களாலும், அனுபவம் உள்ள முதியவர்களினது கருத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கை யாழ்ப்பாணம் இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கக் கணிதர்கள் பற்றிய சிறு குறிப்பு:

பல நூற்றாண்டு காலமாக எமது முன்னோர் பஞ்சாங்க கணிதத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். சூரியனைச் சுற்றியுள்ள கிரகங்கள் சூரியனை வலம் வரும் வேகம், அவை சுற்றும் பாதை, ஒன்றோடொன்று தொடர்பு படும் பாங்கு, அவைகளின் ஈர்ப்பு விசை பூமியில் ஏற்படுத்தும் தாக்கம் போன்ற எண்ணிறைந்த பல அம்சங்களைக் கணித்து அதன் மூலம் மனித வாழ்வை மேம்படுத்தும் பணியில் எமது கணிதர்கள் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

இவைகள் எல்லாம் மக்களின் வாழ்விற்கு வழிகாட்டியாக உதவக்கூடிய கருவிகளாக அமைகின்றன ஆயினும் எமது அமைவிடத்திற்குரிய கிரக சஞ்சாரங்களைத் துல்லியமாகக் கணிக்கக் கூடிய கணிதர்கள் எம்மத்தியில் வாழ்வது பெருமைக்குரிய விடயமே.

அந்த வகையில் ஏறக்குறைய மூன்றரைநூற்றாண்டுகளாக இராமலிங்க முனிவர் பரம்பரையில் வந்த இரகுநாதையர் வம்சத்தினர் வாக்கிய பஞ்சாங்கத்தினைக் கணித்து வருகின்றனர். இலங்கைத் தீவில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு வாக்கிய பஞ்சாங்கக் கணிப்பில் ஈடுபட்டிருக்கும் இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கக் கணிதர்கள் தற்போது புலம் பெயர்ந்து வாழும்; தமிழர்களுக்காக பல நாடுகளுக்கு வாக்கிய பஞ்சாங்கக்கணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இவ் இணையதளத்தின் எதிர் காலப் பதிப்புகள் மேலும் வனப்புற உங்கள் ஆக்கபூர்வமான ஆலோனைகள் எமக்கு பேருதவி புரியும்.

நன்றி

வணக்கம்.